இந்தியா

விலை வீழ்ச்சி: சட்டசபை முன் உருளைக் கிழங்கைக் கொட்டி போராட்டம்!

webteam

விலை வீழ்ச்சி அடைந்ததால் உத்தரப்பிரதேச சட்டசபை கட்டிடத்தின் முன், உருளைக்கிழங்கைக் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உருளைக் கிழங்கின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

விலையை குறைந்தபட்சம் 10 ரூபாயாக அறிவிக்கக் கோரி, விவசாயிகள் போராடி வருகின்றனர். இதையடுத்து உத்தரப்பிரதேச மாநில சட்டசபை கட்டிடத்தின் முன், உருளைக் கிழங்கைக் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.