இந்தியா

பஸ் - லாரி மோதி 10 பேர் பலி : உ.பி.யில் நடந்த கோர விபத்து

JustinDurai

உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை 8 மணியளவில் பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து ஒன்று, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. குந்தர்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்பூர் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை நேரத்தில் நிலவிய மூடுபனி காரணமாக எதிரில் வாகனம் வருவது தெரியாமல் மோதி விபத்து நடந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர். 

விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.