இந்தியா

“இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக குழு அமைப்பு”- பாரிவேந்தர் கேள்விக்கு மத்திய அரசு பதில்

கலிலுல்லா

இந்திய மொழிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க தொலைநோக்குத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக பாரிவேந்தர் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி இந்திய மொழிகளின் வளர்ச்சியை உறுதிசெய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதா என பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்க சாமு கிருஷ்ண சாஸ்திரி தலைமையில் வல்லுனர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய மொழிகளை கற்பிப்பது, வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்காக இந்தக் குழு மத்திய கல்வித் துறை அமைச்சகத்துக்கு ஆலோசனைகள் அளிக்கும் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.