இந்தியா

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்!

EllusamyKarthik

தமிழ்நாட்டின் குன்னூரில் இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உயிரிழப்பிற்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

“நாட்டிற்கே இந்நாள் மிகவும் துயரமான நாள். நமது நாட்டில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தை விபத்தினால் நாம் இழந்துள்ளோம். தாய்நாட்டிற்காக அயராது சேவையாற்றிய ராணுவ வீரர். பணியில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரது இழப்பு வலியை ஏற்படுத்துகிறது. 

இந்த விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் மனைவி மற்றும் 11 பாதுகாப்பு படை வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம்பட்டு சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.