woman with fever  AI generated image
இந்தியா

பன்றி காய்ச்சல்| தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல்!

பன்றி காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Rishan Vengai

பன்றி காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.

கேரளாவில் பரவும் பன்றி காய்ச்சல்

பன்றி காய்ச்சல் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் உடற்சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகி உரிய சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.