இந்தியா

மத்திய அரசு வசமுள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட புதிய அமைப்புக்கு ஒப்புதல்

Sinekadhara

மத்திய அரசு வசமுள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட தேசிய அளவில் புதிய அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய நில வருவாய் அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வசமுள்ள உபரி நிலங்கள், பயனற்ற கட்டடங்களை விற்று அரசின் வருவாயை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.