இந்தியா

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்- வெளியானது அதிர்ச்சி வீடியோ

webteam

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்‌ளன.‌ 

குர்நூல் - செகந்திராபாத் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், ஐதராபாத் அருகே கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று, புறப்படத் தொடங்கியது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிரே வந்த லிங்கம்பள்ளி - ஃபலக்நுமா ரயில் எக்பிரஸ் ரயில் மீது மோதியது. இதில் செகுந்தரபாத் ரயிலின் பெட்டிகள் பல அடி உயரத்துக்கு எழும்பி தடம் புரண்‌டன.

இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். தவறான சிக்னல் தரப்பட்டதே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.