இந்தியா

கர்நாடகாவில் நாளை முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு

jagadeesh

கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நாளை இரவு 9 மணி முதல் மே 10 ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.