2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள்.
- ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டாம்
- வருமான நிரந்தரக் கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்வு
- 2 ஹெக்டர் வரை உள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் என மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்
- மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை அமைச்சகம் புதியதாக உருவாக்கப்படும்
- மாதம் ரூ 15000 வரை ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3000 வழங்கப்படும்
- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வரித்தாக்கல் செய்தால் போதும்.
- ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு
- பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு
- பிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி 6 லட்சமாக உயர்வு
- இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை மார்ச் மாதத்திற்குள் உருவாகும்