இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் புதிய தலைமுறை
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ஜார்க்கண்ட் முதலமைச்சர் கைது முதல் ஞானவாபியில் பூஜைசெய்ய நீதிமன்றம் அனுமதி வரை

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்.

  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகிறார் சம்பாய் சோரன் தேர்வு. ஜே.எம்.எம் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பதவியேற்கிறார்.

  • ஹேமந்த சோரன் கைது செய்யப்பட்ட நிலையில் I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை.

  • இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். விவசாயம், மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு.

  • செல்போன் தயாரிப்பில் பயன்படும் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரி 10 விழுக்காடாக குறைப்பு.செல்போன்கள் விலை 3 முதல் 5 விழுக்காடு வரை குறையக்கூடும் என தகவல்.

  • தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை திமுக அரசு ஒருபோதும் ஏற்காது.

  • முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளது முதலீட்டை ஈர்ப்பதற்கான பயணமல்ல, முதலீடு செய்வதற்கானது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • புதுக்கோட்டை வேங்கவயல் குடிநீர்த்தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம்.விசாரணையை 8 வாரத்திற்குள் முடிக்கும்படி சிபிசிஐடி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாற அனைத்து தகுதிகளும் உள்ளன.

  • ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி.