இந்தியா

டெல்லி சென்றார் முதலமைச்சர் பழனிசாமி

Rasus

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்துப் பேசுவதற்காக அவர் டெல்லி சென்றிருக்கிறார்.

இரவு 7 மணி வாக்கில் சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சரை, அமைச்சர்கள், உயரதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். பிரதமரை சந்தித்துப் பேச இருக்கும் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்‌றப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகிறது.