இந்தியா

சுயேட்சையாக செயல்பட்ட கட்சியினர்... அதிரடி நடவடிக்கை எடுத்த மம்தா பானர்ஜி

Veeramani

மேற்குவங்கத்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிடும் 61 திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 61 பேரும், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அக்கட்சி நீக்கியுள்ளது.

“ கட்சிக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டால் வேட்புமனுக்களை திரும்பப் பெற வேண்டும் என்ற தெளிவான செய்தியை எங்கள் தலைமை இந்த தலைவர்களுக்கு அனுப்பியுள்ளது. சிலர் திரும்பப் பெற்றனர், அவ்வாறு திரும்ப பெறாதவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம்” என்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஜோதிப்ரியோ கூறினார்.