இந்தியா

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் வீர மரணம்

webteam

குப்வாரா அருகே ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகில் உள்ளது பன்ஞ்காம். இங்குள்ள ராணுவ முகாம் மீது, பயங்கரவாதிகள் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி ராணுவ நிலைகளுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 5 வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அங்கு துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.