நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய மசோதா பல வருடங்களாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்துவந்தது. சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது முக்கியமான இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் படி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.