இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 223 ஆக உயர்வு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 223 ஆக உயர்வு..!

rajakannan

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று வரை 195 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 223 ஆக உயர்ந்துள்ளது. இதில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 32 பேர் உள்ளனர். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 49 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்ததாக, கேரளாவில் 26 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 22 பேரும் அதிகபட்சமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மூன்று பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.