இந்தியா

இரு தரப்பினரிடையே தகராறு -விலக்க முயன்றவருக்கு 22 முறை கத்தி குத்து: பரிதாப முடிவு

EllusamyKarthik

டெல்லியில் வசித்து வந்தவர் நீரஜ். அவருக்கு முகேஷ் மற்றும் ராகேஷ் என இரண்டு நண்பர்கள் உண்டு. அவர்கள் இருவரும் அண்மையில் அங்குள்ள கிழக்கு அன்சாரி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செக்யூரிட்டியாக பணியில் சேர்ந்து அந்த பணியை கவனித்து வருகின்றனர். 

அதே மருத்துவமனையில் கிருஷ்ணன் மற்றும் ரவியும் செக்யூரிட்டியாக வேலை செய்துள்ளனர். அவர்கள் பார்த்து வந்த வேலையை தான் முகேஷ் மற்றும் ராகேஷுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மீது ஆத்திரமடைந்த கிருஷ்ணனும், ரவியும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வது வழக்கம். 

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவும் பணி முடிந்து சென்றவர்களிடம் கிருஷ்ணனும், ரவியும் வாக்குவாதத்தில் எடுப்பட்டுள்ளனர். அவர்களுடன் சிறுவன் ஒருவனும் இருந்துள்ளான். அதே போல முகேஷ், ராகேஷுடன் நீரஜ் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதை விலக்க முயன்ற நீரஜை எதிர் தரப்பினர் 22 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் மற்றும் ரவி கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்புடைய சிறுவன் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளான் என போலீசார் சொல்லியுள்ளனர்.