இந்தியா

கேரளா: பூசாரிகளின் கால்களை கழுவிய பக்தர்கள் - உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

JustinDurai

கேரளா மாநிலத்தில் கோயில் ஒன்றில் பாவங்களை போக்க பக்தர்கள், 12 பூசாரிகளின் கால்களை கழுவியதாக செய்தி வெளியான நிலையில் அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

திரிபுனிதுரா பகுதியில் உள்ள ஸ்ரீ பூர்ணாதிரயேசா கோயிலில், பாவங்களை போக்க கோயில் நிர்வாகம் கூறியதன் பேரில் பக்தர்கள் பூசாரிகளின் கால்களை கழுவியதாக செய்தி வெளியானது. இதனை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட கேரளா உயர்நீதிமன்றம், கொச்சின் தேவஸம் போர்டு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிக்க: மலை இடுக்கிலிருந்த இளைஞரை, பத்திரமாக மீட்டதற்கு இந்திய ராணுவத்துக்கு கேரள அரசு நன்றி