இந்தியா

தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியவை: மத்திய கல்வி அமைச்சர் தகவல்

JustinDurai
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். அதில், நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரியலூர், கோவை, கன்னியாகுமரி, மதுரை, நாகை, சேலம், நெல்லை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 41 மாவட்டங்களும், மத்தியப் பிரதேசத்தில் 39 மாவட்டங்களும் கல்வியில் பின்தங்கியிருப்பதாக மத்திய உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, மொத்த கல்வி விகிதம், மாணவர் சேர்க்கை விகிதம், கல்லூரி- மக்கள் தொகை விகிதம் உள்ளிட்ட அளவுகோள்கள் அடிப்படையில் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.