இந்தியா

தாய்லாந்து ஓபன்:முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி :சாய்னா,பிரனாய் விளையாடுகின்றனர்

EllusamyKarthik

தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த சாய்னாவும், எச்.எஸ். பிரனாயும் முதல் சுற்றில் விளையாடுகிறார்கள். 

கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் மற்றொரு இந்திய வீரர் சவுரப் வர்மாவை எதிர்த்து விளையாடினார். 21 - 12, 21 - 11 என நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்த் சவுரபை வீழ்த்தி இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் பருப்பள்ளி காஷ்யாப் கனடாவின் ஜேசன் அந்தோணியுடன் விளையாடினார். இருப்பினும் மூன்றாவது செட் முழுவதும் விளையாடாமல் காஷ்யப் ஆட்டத்தில் இருந்து விலகினார். 

இரட்டையர் பிரிவில் சாத்விக் ராஜ் மற்றும் சிராக் செட்டி தென்கொரிய வீரர்களை வீழ்த்தி அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளனர். கலப்பு இரட்டையர் ஆட்டத்திலும் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.