இந்தியா

தீவிரவாதிகள் தாக்குதல்: 2 எஸ்.எஸ்.பி வீரர்கள் பலி

webteam

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எஸ்.எஸ்.பி.,எனப்படும் சாஸ்த்ரா சீமா பால் படை மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜவஹர் டனல் என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது. நேற்றிரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி சாஸ்த்ரா சீமா பால் படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.‌ மேலும், தங்கள் முகாம் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன எ‌ன்பது பற்றியும் அவர்கள் விவாதித்து வருகின்றனர்.