ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடிய புகாருக்கு ஆளாகியுள்ள கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் பயனர்களிடமிருந்து தகவல்களை பயன்படுத்தினீர்களா, யாருக்காக தகவல்களை பெற்றீர்கள் என விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் திருட்டு விவகாரத்தில் குறிப்பிட்ட 6 கேள்விகளுக்கு கேம்பிரிட்ஜ் அனலிடிகா பதில் தர வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய அரசு எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:-
இந்த விபரங்களை மார்ச் 31-க்குள் அளிக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதோடு, விபரங்களை அளிக்க தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.