தெலங்கானா சம்பவம்
தெலங்கானா சம்பவம் புதிய தலைமுறை
இந்தியா

பயணிகளுடன் அரசுப் பேருந்தைத் திருடிய திருடனுக்கு பாதி வழியில் நிகழ்ந்த சோக முடிவு!

Prakash J

தெலங்கானாவில் அரசுப் பேருந்தை, பயணிகளுடன் திருடிச் சென்ற கொள்ளையன் ஒருவன், டீசல் தீர்ந்ததால் பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பேருந்தைக் காணும் என டிரைவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிரிசில்லா மாவட்டம் கம்பீரப்பேட்டையைச் சேர்ந்த பந்தேல ராஜு என அடையாளம் காணப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.