இந்தியா

தெலங்கானா: ஒரே சமயத்தில் 2 பெண்களை காதலித்து ஒன்றாகவே திருமணம் செய்த இளைஞர்

sharpana

தெலங்கானாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது அத்தை மகள்கள் இரண்டு பேரை ஒரே சமயத்தில் காதலித்து, ஒரே சமயத்தில் திருமணமும் செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தின் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்ஜுன் என்ற இளைஞர் ஒரே சமயத்தில் தனது அப்பாவின் சகோதரியான அத்தை மகள்களை ஒருவருக்கொருவர் தெரியாமல் ஏமாற்றி காதலித்து வந்துள்ளார். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள அர்ஜுனுக்கு  சமீபத்தில் வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் குறித்த பேச்சை ஆரம்பிக்கும்போது அத்தை மகள்கள் இருவரையும்  காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது.

இந்நிலையில், ஏமாற்றினாலும் பரவாயில்லை ஏமாற்றிய இளைஞரைத்தான் திருமணம் செய்வேன் என்று இரண்டு பெண்களும் உறுதியாக இருந்ததால் ஒரே சமயத்தில் இருவரையும் திருமணம் செய்துள்ளார் அர்ஜுன். பழங்குடியினத்தில் இப்படி ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணப்பதற்கு அனுமதி இருக்கிறது என்பதால் எவ்வித எதிர்ப்புகளும் கிளம்பவில்லை.