ஆந்திராவில் பள்ளி ஆசிரியர் 6ஆம்வகுப்பு சிறுமியை தாக்கியதில்தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சித்தூர் மாவட்டம் புங்கனூர் கிராமபள்ளியில் படிக்கும் மாணவி செய்த ஏதோ ஒரு குறும்புக்காக அவளது தலையில் ஆசிரியர் டிபன் பாக்ஸால் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் சிறுமிக்கு கடும்தலை வலியும் மயக்கமும் ஏற்பட்டதால் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் சிறுமியின் மண்டை ஓட்டு எலும்பு உடைந்தது தெரியவந்தது.
சிறுமி பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படடுள்ளார். இது குறித்தபுகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரைவிசாரித்து வருகின்றனர்.