இந்தியா

ஒடிசா: நகராட்சி குப்பை லாரி ஓட்டும் பொதுமுடக்கத்தால் வேலையிழந்த பள்ளி ஆசிரியை

jagadeesh

ஒடிசா மாநிலத்தில் பொதுமுடக்கத்தால் வேலையிழந்த பள்ளி ஆசிரியை ஒருவர், நகராட்சி குப்பை லாரியின் ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

புவனேஸ்வரில் உள்ள பத்தபாந்தா பகுதியில் வசிக்கும் ஸ்மிருதிரேகா பெஹ்ரா, நர்சரி பள்ளியில் வேலை செய்து வந்தார். கொரோனா பொதுமுடக்கத்தால் ஸ்மிருதிரேகா வேலையிழந்தார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவரது கணவரும் வேலையிழந்துவிட, குடும்பம் வறுமையில் வாடியது. இதையடுத்து ஸ்மிருதிரேகாவும் அவரது கணவரும் புவனேஸ்வர் நகராட்சியில் குப்பை லாரிகளின் ஓட்டுநராக பணியில் சேர்ந்தனர்.