இந்தியா

குடியரசுத் தலைவரை சந்திக்க ஆளுநர் பன்வாரிலால் டெல்லி பயணம்

webteam

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குடியரசுத் தலைவரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்க டெல்லி சென்றுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார். நாளையும், நாளை மறுநாளும் மத்திய அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக ஆளுநர் சந்தித்து பேசுகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்கிறார்.