தெலங்கானா ஆளுநராக வரும் 8-ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2014-ஆம் ஆண்டு முதல், தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியிலிருந்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஆளுநராக நியமிக்கப்பட்டதால், தனது கட்சிப் பதவியையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் தமிழிசை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தெலங்கானா ஆளுநராக வரும் 8-ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை வரும் 5-ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாகவும், அதன்பின் 7-ஆம் தேதி தமிழகம் திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து வரும் 8-ஆம் தேதி தெலங்கானா செல்லும் தமிழிசை அன்றைய தினமே பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.