இந்தியா

"பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது" - என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி

kaleelrahman

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரெங்கசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.


புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும் என்ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரெங்கசாமி திருச்செந்தூருக்கு வருகை தந்தார். பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சென்ற அவர், மூலவர், சண்முகர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... கொரோனா காலத்தில் கடந்த ஒரு ஆண்டாக திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தராமல் இருந்தேன். இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தேன். மிகமகிழ்ச்சியாக இருந்தது.


வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.