இந்தியா

காதலியின் நடத்தையில் சந்தேகம்.. கொலை செய்த காதலர்..!

காதலியின் நடத்தையில் சந்தேகம்.. கொலை செய்த காதலர்..!

webteam

மகாராஷ்டிராவில் காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை காதலரே கொலை செய்துள்ளார். 

மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் அஸ்ராஃப் ஷேக். இவரும் 19 வயது மாடல் பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்தப் பெண் மாடலிங்கில் ஈடுபட்டு வந்ததால் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார். இதனையடுத்து காதலி மீது அஸ்ராஃபிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரும் கடந்த 12-ஆம் தேதி காரில் நாக்பூரின் தேசிய நெடுங்சாலையில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது காதலியின் கழுத்தை நெரித்து அஸ்ராஃப் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக நாக்பூர் காவல்துறையினர், “எங்களுக்கு சனிக்கிழமை நாக்பூர் நெடுங்சாலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாங்கள் சென்று பார்த்தப்போது அந்தப் பெண்ணின் அடையாளம் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவரிடம் புகைப்படத்தை வைத்து நாங்கள் அடையாளம் கண்டோம். 

அதன்பிறகு நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் காதலரான அஸ்ராஃபை கைது செய்துள்ளோம். அவரை விசாரித்தப்போது அவர் அப்பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.