இந்தியா

”நாட்டிற்குள் பிரச்னைகள் இருக்கும்தான்.. அதற்காக வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதா?” - ரெய்னா

sharpana

விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், பாடகி ரிஹானா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ”ஒரு நாடாக நமக்கு இன்றைக்கு தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கின்றன

நாளையும் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கும்; அதற்கு நாம் ஒரு பிரிவை ஏற்படுத்துகிறோம் அல்லது வெளிப்புற சக்திகளால் குழப்பமடைகிறோம் என்று அர்த்தமாகாது; எல்லாவற்றையும் இணக்கமான மற்றும் பாரபட்சமற்ற பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.