இந்தியா

சமூக வலைதளங்களில் நீதிமன்றங்களுக்கு எதிராக உலாவரும் பொய் செய்திகள்: உச்சநீதிமன்றம் வேதனை

நிவேதா ஜெகராஜா

யூடியூப் சேனல்கள், செய்தி இணையதளங்களில் பொய் செய்திகள் அதிகம் வெளியாவதை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நிஜாமுதீன் மர்கஸ் விவகாரம் மதவாதமாக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சமூக வளைதளங்களில் எவ்வித பொறுப்புமின்றி நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக செய்திகள் பதிவிடப்படு வருவதாக கூறி தலைமை நீதிபதி அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

மேலும் அதிகாரமிக்கவர்களின் கருத்துகள் மட்டுமே யூடியூப் சேனல்களில் எதிரொலிப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.