சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நாராயன்பூர் காவல் கண்காணிப்பாளர், மோஹித் கார்க் கூறுகையில், “இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.