இந்தியா

“2024 மக்களவைத் தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்” - சுப்ரமணியன் சுவாமி

webteam

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என எம்.பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஓய்வுபெற்றிருக்கிறாரே தவிர, வேறு எதிலிருந்தும் அல்ல. அவர் தடையை எதிர்த்து  போராடும் திறன்கொண்டவர். கிரிக்கெட்டில் ஒரு அணியை முன்னுதாரணமாக வழிநடத்தும் அவரது திறமை பொது வாழ்விற்கும் வேண்டும். அவர் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவருடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.