இந்தியா

தனியார் பயிற்சி மையங்களில் அடிமைகளாக நடத்தப்படும் மாணவர்கள்: பிரகாஷ் ஜவடேகர்

webteam

தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

தனியார் பயிற்சி மையங்களில் குழந்தைகள் அடிமைகளாக நடத்தப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கவலை தெரிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பித்தலில் இருக்கும் குறைபாடுகளே இதுபோன்ற பயிற்சி மையங்கள் அதிகரிக்க காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 95 சதவிகிதம் பயிற்சி மையங்களுக்குச் செல்வதாக அசோசம் என்ற ஆய்வு கூறியுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.