இந்தியா

கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வம்சாவளி பெண்

Sinekadhara

விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஷிரிஷா பண்டாலா பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் விர்ஜின் கேலடிக் விமான நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11 ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இக்குழுவில் ஆந்திர மாநிலம் குண்ட்டூரை பூர்வீகமாகக் கொண்ட ஷிரிஷா பண்டாலாவும் உள்ளார். கல்பானா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள ஷிரிஷாவுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.