இந்தியா

எல்லை தாண்டியதாகக் கூறி 4 மீனவர்கள் கைது

எல்லை தாண்டியதாகக் கூறி 4 மீனவர்கள் கைது

webteam

இலங்கையின் பருத்தித்துறை கடற்பகுதியில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீன‌வர்கள் ராமசாமி, கபிலன், தேவராயன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் நேற்று காலை நாட்டு படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பருத்தித்துறை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் அவர்கள் நால்வரையும் கைது செய்ததோடு,‌ அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது 4 மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்குச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.