இந்தியா

விவசாயிகள் தற்கொலைக்கு காரணமென்ன? ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

webteam

விவசாயிகள் தற்கொலைக்கு ஆன்மீக நாட்டம் குறைந்து போனதும் ஒரு காரணம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விதர்பா பகுதியில் 512 கிராமங்களில் நடைபயணம் மேற்கொண்டதாகவும், விவசாயிகள் தற்கொலைக்கு ஏழ்மை மட்டுமே காரணமல்ல என அறிந்ததாகவும் கூறியுள்ளார். யோகா மற்றும் பிராணயாமத்தை கற்றுத் தருவதன் மூலம் தற்கொலை எண்ணத்தை நீக்கலாம் என்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.