இந்தியா

சென்னையில் இருந்து சீரடிக்கு விமான சேவை: பக்தர்கள் மகிழ்ச்சி

webteam

ஆன்மீக தலமான சீரடிக்கு சென்னையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ளது, புகழ்பற்ற ஸ்ரீ சாய்பாபா கோயில். இங்கு ஏராளமான பக்தர்கள் தினமும் சென்று வருகின்றனர். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து இங்கு செல்ல விரும்புவர்கள்

முதலில் மும்பை அல்லது அவுரங்காபாத் செல்ல வேண்டும். அதன் பிறகு அங்கிருந்து கார் அல்லது பேருந்து மூலமே சீரடிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி சீரடிக்கு சென்னையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சாய்பாபா பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.