இந்தியா

'தலைவர்கள்தான் தடுத்தனர்' - பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பின் சாராம்சம்.!

webteam

பாபர் மசூதி வழக்கில் அத்வானி, மனோகர் ஜோஷி உட்பட  32 நபர்கள் விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார். 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய அத்வானி, மனோகர் ஜோஷி உட்பட 32 நபர்களை லக்னோ சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வாசிப்பில் குறிப்பிட்ட  நீதிபதி எஸ்.கே யாதவ், பாபர் மசூதி இடிப்பை அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் தான் தடுத்தனர் என்று தெரிவித்தார். மேலும் பாபர் மசூதி இடிப்பது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்பிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.