பஞ்சாப் - மீட்பு பணி
பஞ்சாப் - மீட்பு பணி Twitter
இந்தியா

கால்வாயில் தவறிவிழுந்து உயிருக்குப் போராடிய பெண்: பத்திரமாக மீட்ட ராணுவ வீரர்

webteam

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பக்ரா கால்வாயில், பெண் ஒருவர் தவறிவிழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ராணுவ வீரர் கிருஷ்ணன், கால்வாயில் குதித்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டார்.

துணிச்சலுடன் செயல்பட்டு பெண்ணை காப்பற்றிய ராணுவ வீரர் கிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் அப்பெண்ணை காப்பாற்றிய வீடியோ காட்சிகளை பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். அதுவும் தற்போது வைரலாகி வருகிறது.