இந்தியா

முதல் கைகுலுக்கல்.. ’சச்சின் பைலட்-அசோக் கெலாட்’ சந்திப்பு: தணிந்த ராஜஸ்தான் அரசியல் சூடு

webteam

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் முதன்முறையாக அசோக் கெலாட்டை இன்று மாலை சந்தித்தார். இது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இப்போது முரண்பட்ட இரு மனங்கள் இணைந்துள்ளன.

இன்று மாலை தொடங்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர். முன்னதாக, இரு எம்எல்ஏக்களின் இடைநீக்கத்தை காங்கிரஸ் தலைமை ரத்து செய்திருந்தது.

ராஜஸ்தான் சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு ஒரு நாள் முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை சந்தித்த பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார் சச்சின் பைலட். அவரது குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளது காங்கிரஸ் தரப்பு.