இந்தியா

உபி-யில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஸ்மார்ட் போன், ஸ்கூட்டர் வழங்கப்படும்: பிரியங்கா

kaleelrahman

உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் 40 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்களும், பட்டப் படிப்பு முடித்த பெண்களுக்கு எலக்டிரிக் ஸ்கூட்டரும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.