இந்தியா

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்

நிவேதா ஜெகராஜா

(கோப்பு புகைப்படம்)

ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இவர்களின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இறந்தவர்கள் சகினா பேகம், அவரது மகள் நசீமா அக்தர், ருபீனா பானோ, மகன் சாஃபர் சலிம், இவர்களின் உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமத் ஆகியோர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களின் உடல், சித்ரா என்ற பகுதியிலுள்ள வீட்டிலிருந்த மீட்கப்பட்டு அப்பகுதியிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேற்கொண்டு அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மேற்கொண்டு தகவல்களை திரட்டி வருகின்றனர்.