இந்தியா

"ஸ்வப்னாவை சிவசங்கரன் தான் அறிமுகம் செய்துவைத்தார்"- முன்னாள் அதிகாரி வாக்குமூலம் !

jagadeesh

கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் கூறியதாலேயே, ஸ்வப்னா சுரேஷ் தங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் அறை ஏற்பாடு செய்ததாக முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தங்க கடத்தலுக்கு உதவும் வகையில் ஸ்வப்னாவுக்கு அறை ஏற்பாடு செய்ததாக முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி அருண் பாலசந்திரன் மீது புகார் உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அருண் பாலசந்திரனிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அப்போது அவரிடம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் தான் ஸ்வப்னாவை அறிமுகம் செய்து வைத்தாகவும், சிவசங்கரன் கூறியதாலேயே, ஸ்வப்னா சுரேஷ் தங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் அறை ஏற்பாடு செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.