இந்தியா

வெளிநாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கும் சீரம்

jagadeesh

கோவீஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், மற்ற நாடுகளிலும் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா, பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளிலும் தடுப்பூசியை உற்பத்தி செய்வது குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். வருகிற ஜூலை மாதத்திற்குள் 100 மில்லியன் அளவுக்கு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், ஆண்டுக்கு 3 பில்லியன் டோஸ் அளவுக்கு உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.