இந்தியா

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி..!

Rasus

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் சார்பில் தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை மீண்டும் ஆந்திர அரசு நியமித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால், சேகர் ரெட்டி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏற்கெனவே நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆந்திர அரசு மீண்டும் அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்துள்ளது.