இந்தியா

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

webteam

குடியரசுத் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளதால், டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் என நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா விமான தாக்குதலை முறியடிக்கும் வகையில், உயரமான கட்டடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் முக்கிய இடங்களில் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.