இந்தியா

வயதான ஏழைப் பெண்ணை எட்டி எட்டி உதைக்கும் மருத்துவமனை பாதுகாவலர் ! அதிர்ச்சியளித்த வீடியோ

jagadeesh

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வயதான பெண் ஒருவரை மருத்துவமனை பாதுகாவலர் கொடூரமாக தாக்கிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரக்யாராஜ் மருத்துவமனைக்கு வயதான ஏழைப் பெண் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு தங்கும் இடம் இல்லாததால் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையின் வளாகத்தின் உள்ளே வந்து ஒரு ஓரமாக அமர்ந்துள்ளார். அப்போது வந்த பாதுகாவலர் அந்த வயதான பெண்ணை இடத்தை விட்டு போகுமாறு கூறியுள்ளார். அப்போதும் அந்த வயதானப் பெண் செல்லாததால், அந்தப் பாதுகாவலர் அவரை காலால் பல முறை உதைக்கு கொடுரமாக தாக்கியுள்ளார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பதிவானது. இதனையடுத்து போலீஸார் கவனத்துக்கு சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் பாதுகாவலரான சஞ்ஜய் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்ட 33 நொடி வீடியோவில், அந்த வயதான பெண் வலி தாங்க முடியாமல் கதறி அழுகிறார். அப்போது அந்தப் பாதுகாவலருடன் இரண்டு பேர் இருந்தார்கள் அவர்களும் அதனை தடுக்கவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சஞ்ஜய் மிஸ்ராவை போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த வயதான பெண்ணுக்கு மருத்துவமனை சிகிச்சையளித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை அந்த மருத்துவமனை ஒப்பந்தத்திலிருந்து நீக்கியுள்ளது.