இந்தியா

 கேரளாவில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - பினராயி விஜயன்

kaleelrahman

கேரளாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைதொடர்ந்து, ஒன்று முதல் 7ஆம் வகுப்பு வரை, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க உத்தரவிட்டுள்ளார். மற்ற வகுப்புகளை நவம்பர் 15ஆம் தேதி திறக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.