இந்தியா

ரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

webteam

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்களை  உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பின் மீது தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரஃபேல் வழக்கில் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கே.எஸ்.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.